First edition in Tamil Language
-
காகித வார்த்தைகளை கவிதை என்கிறார்களே.. ஒவ்வொரு நொடியும் என்னை சிதறடிக்கும் உன் சிம்பொனி சிரிப்பை என்ன சொல்வது...
நீ என்னை பைத்தியக்காரன் என்று சொன்னபோது நான் மகிழ்ந்தேன் ஏன் தெரியுமா? நீ என்னிடம் அந்த சில நொடிகள் பேசியதற்காக! ஆம் நான் பைத்தியக்காரனே! உன் மீது.
செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால் செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு, கோபம் திரும்பி விடுகிறது.
அன்பே! என் இதயத்தின் பேரரசில் நான் உனக்கு அரசி என்று பட்டத்தை அளித்தேன். ஆனால் நீயோ! மாற்றானுக்கு இல்லத்தரசி எனும் பதவிக்கோ மனுசெய்து விட்டாயே! இது நியாயமா?.
அவளின் அத்தியாயம் ஒரு தடித்த கரும்புள்ளி என் மனதில்
காதலியே நீ அனுப்பும் கடிதங்களுக்கு தபால் தலை ஒட்டதே உன் இதயம் சுமந்து வரும் கடிதங்களுக்கு அவர்கள் ஓங்கி குத்துவதை தாங்க முடியாது..
சீரும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே...
எத்தனை முறை பேசினாலும் தினமும் உன் குரலுக்காக;
என் உள்ளம் உருகிக்கொண்டிருக்கும் உன் வரவுக்காக!
கணப்பொழுதே மலரில் உட்கார்ந்து போகும் வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும் உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய் ,,,,, அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
மேகங்களும் மின்னல்களும் என்னை உரசி போவதுண்டு!
தேகங்கள் என்னைக்கடந்ததுண்டு என் மனம் சிலபோதும் சிலிர்த்ததுண்டு!
அரசியே! உன்னைப்போல என்னையாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப்போனதில்லை!
பெண்ணை நேசித்தவன் நிச்சயம் ஒரு நாள் என்னையும் நேசிப்பான் --- இப்படிக்கு டாஸ்மாக் ---
காதல் ஒரு பனை மரம் போல... ஏறினா நுங்கு.. விழுந்தா சங்கு...
பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு நாளும் கண்களுக்குள் வந்துகொண்டுதான் இருக்கின்றன கனவாக அல்ல கண்ணீராக..
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம். அழகுக்குழந்தை பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்.
கொய்யாப்பழம்போலே அவள் பேரு இனிக்கும்!
சொன்னாலே நெஞ்சிக்குள் பூப்போலே மணக்கும்!
அவள் சொன்னது நாவினால் சுட்ட வடு
அவள் சொல்லிக்கொண்டிருப்பது நாவினால் சுடுகின்ற நெருப்பு.
"நீ என்னை நேசிக்கிறாய்" என்று சொல்வதை விட.. "நீ என்னை பிரியமாட்டாய்" என்று சொல்வதைத்தான் நான் அதிகம் விரும்புகிறேன் ...!
உலகமே காற்றைத்தான் சுவாசிக்கிறது நானோ உன்னையே சுவாசிக்கிறேன்
உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்நான் தோற்றுப் போனேன்!அவன் உலக அழகி பெயர் கேட்டான்,நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்.
வார்த்தைகளால் செய்த ஆயுததால் என்னை தாக்கிவிட்டாள் ---- அவளின் கல்யாண செய்தி..
ஏற்கனவே பூத்த பூ தான் என்றாலும், மறுபடியும் பூக்கிறது அவள் சூடும் போது..
உலகத்தின் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் கெட்ட மனிதர்களின் கொடுமைகள் அல்ல... நல்ல மனிதர்களின் மௌனம் தான்...
அழிக்கப்பட்டது அலிபாபாக்கள் மட்டுமே.. 40 திருடர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அன்பே இப்போது அதிகம் நான் கண்களை மூடிக்கொண்டே இருக்கிறேன்! ஏன் தெரியுமா? கனவிலாவது என்னோடு நீ வாழும் அந்த நிமிடங்களுக்காக....
சற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்படி இன்னொரு இதயத்தையும் காதலிக்க முடிந்தத...
என் காதலி பதவி உயர்வு பெற்றாள் இன்னொருவன் மனைவியாக...
LOVE என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
நீரின்றி அமையாதது இவ்வுலகம்.. என் அன்பே.. நீ இன்றி அமையாது என் உலகம்...
சிறிது தூரம் நடக்கவே சலித்து கொள்கிறவன் நான்...ஆனால், அன்று வெகுதூரம் நடந்தேன் விடை தெரியாமல்...."அவள் பின்னால்" .....!
என்னவளின் இதழை தெரியாமல் கடிதிட்ட எறும்பு இறந்து போனது... சர்க்கரை வியாதியால்..!!!
உன் இதழ் வழி சிந்தும் குளிர்பானத்திர்க்காக காத்திருக்கும் காதலன் நான்...
என்னவளே... பொதுஇடங்களில் பாடல்களை முனுமுனுக்காதே... இசைக்காக வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும்...
உன் பிஞ்சு விரல்கள் கொண்டு எரிய விடப்பட்ட மெழுகுவர்த்திநான்.. நீ தந்து சென்ற நினைவுகளாலையே உருகிக் கொண்டிருக்கிறேன்..
உடனே உன் உதட்டில் உப்பு என்று எழுதி விடு... கிளம்பிவிட்டது சாரை சாரையாய் எறும்புக்கூட்டம் உன் வீட்டை நோக்கி...
விக்கல் எடுக்கும் போது நான் தண்ணீர் குடிப்பதில்லை... நினைப்பது அவளாக இருந்தால் நீடிக்கட்டுமே...
கண் சிமிட்டாமல் நான் உன்னை பார்க்க ஆசைப்பட்டேன் ஆனால் இப்பொழுது கண் சிமிட்டும் நேரமாவது உன்னை பார்க்க ஆசைப்படுகிறேன்
புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.
குபுக்கென்று பீறிட்டு வெளிவரும் கண்ணீர்த் துளிகளிலெல்லாம் இன்னும் மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின் காதல் முகவரி மெல்லக் கசிந்து எனது உள்ளம் நிரப்பி செல்கிறது .
உலகின் எங்கோ ஒரு மூலையில் பெண்ணால் பாதிக்கபட்டு அவள் நினைவால் இன்றளவும் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே ....
அவள் கூந்தலுக்கு பூசூடுவதில்லை... காரணம்.! படைத்தவன் அந்த பூவுக்கல்லவா கூந்தலை சூடி இருக்கிறான்..
உன் கண்களும் கவிதை எழுதுவதால் தான்.. அடிக்கடி மை தீட்டிக் கொள்கிறாயோ..
மரணத்தில் சுமக்கும் அத்தனை வலிகளையும், உன் மௌனத்தில் சுமக்கின்றேன்..! ரணம் பட்ட இதயமாய் உனக்கும் சேர்த்து வலிகள் சுமக்கிறது எனது தனிமை..!
உன்னுடன் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் ஏழு தலைமுறை வாழ்ந்ததாய் இனித்தாலும்... நீ என்னைப் பிரிந்த ஒவ்வொரு நொடியும் என் அடுத்த பிறப்பையும் கொல்லுவதாய் கசக்குதடி...